Thursday, January 8, 2009

எனக்கான கவிதை

யாருடைய சாயலும் இல்லாமல்
எனக்கான கவிதையை
நான் எழுத வேண்டும்!
கடன் வாங்கா யாப்பு,
கடன் வாங்கா மொழிநடை என்று
எனக்கான கவிதை எழுத முயல்கிறேன்
யார் சாயல் அது!
முதல் எழுத்தை தொக்கி நிற்பது!
மீண்டும் புதிய சொல்லைத் தேடிப் பிடிக்க வேண்டும்.
முடிந்த மட்டும் எழுதுகிறேன்
எனக்கான கவிதையை நானே!
யாரேனும் படிப்பார்களா?
தெரியவில்லை!
பின் ஏன் எழுதவேண்டும்?
எனக்கான உறக்கம் போல!
முடித்துவிட்டேன்!
ஓ!
என்ன இது!
ஒவ்வொரு வார்த்தையும்
ஒவ்வொன்றை பறைசாற்றுகிறதே!
மீண்டும் எழுதவேண்டும்
எனக்கான கவிதையை நானே!

No comments:

Post a Comment